Abstract Proceedings of ICIRESM – 2019
Full conference PDF is available to the subscribed user. Use your subscription login to access,
அப்பண்ணசாமி புதினம் வெளிப்படுத்தும் வாழ்வியல் கூறுகள்
தமிழ் புதினங்களில் மானுடச் சிந்தனைகளும் சமகால வாழ்வியல் தளைகளும் ஊடாடிக் காணப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் பிறரையும் துன்பப்படுத்தாமல் சமுதாயத்தில் தானும் துன்பப்படாமல் வாழ்வின் விளைபொருளாக உயர்ந்த இலக்கியம் விளங்குகிறது. இலக்கியம் சமுதாயத்தையும் சமுதாயம் இலக்கியத்தையும் தழுவியதாயாகும். ஒன்றையொன்று சார்ந்தே வந்துள்ளன. மனித வாழ்க்கை ஒரு குறுகிய சட்டத்திற்குள் நின்றுவிடாமல் விரிந்து பரந்து முக்கியத்துவம் மிக்கதாய் வேண்டும். மனித மனங்களை விரிவுப்படுத்தி அறவழிப்பட்ட சமுதாயத்தை உருவாக்குவது புதினத்தின் நோக்கமாகும்.
மனித வாழ்வில் நிறைந்து கிடக்கும் தேவைகள்இ ஆசைகள்இ உணர்வுகள்இ அவலங்கள்இ நம்பிக்கைகள்இ கொடுமைகள்இ கொடுமைகளின் மூலவேர்கள் மற்றும் குமுறல்கள் தொலைநோக்கத்தோடு பார்க்கப்பட்டுஇ கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் அவற்றை வெளிப்படுத்தும் சாதனமாகவும் புதினம் விளங்குகிறது. ஒவ்வொருவருக்கும் ஓர் அனுபவத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது. அதனைப் பெற்றுக் கொள்ளாமல் ஒதுங்கி வாழும் மனிதர்கள் வாழ்வில் நிறைவுபெற முடியாது. புதினங்கள் மக்களை இன்புறுத்தியும் அறிவுறுத்தியும் நிற்கின்றன. வாழ்க்கையிலும் மனிதப் பண்பிலும் உள்ள பொதுத் தன்மையை மக்களுக்கு எடுத்துக் கூறி அறிவுறுத்துவதே புதினத்தின் தன்மையாகும். அவ்வகையில் இவ்வியல் அப்பணசாமியின் புதினத்தின் வழி காணலாகும் வாழ்வியல் கூறுகளை எடுத்துரைப்பதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
அப்பண்ணசாமி புதினம்
30/08/2019
372
19363
IMPORTANT DAYS
Paper Submission Last Date
September 27th, 2025
Notification of Acceptance
October 25th, 2025
Camera Ready Paper Submission & Author's Registration
November 11th, 2025
Date of Conference
November 28th, 2025