Abstract Proceedings of IESMDT - 2021
Full conference PDF is available to the subscribed user. Use your subscription login to access,
வள்ளலார் உணர்த்தும் நெறிகள்
மக்களை நன்னெறிப்படுத்தச் சமயங்கள் தோன்றின. அவை கருனை, ஒழுக்கம் போன்ற அறநெறிப் பணிபுகளை வாழ்வியல் விழுமியங்களாகக் கொண்டுலது. மரபினரின் ஆதிக்கம் வலுவடையவே சமய வழிப்பாட்டு முறையில் பெரும்மாற்றம் நிகழ்ந்தது. பிறப்பால் யாந்தோன் என்று பல பறைசாற்றிக் கொண்டவர்களின் ஆதிக்கம், மக்கள் வாழ்வில் ஒற்றுமை ஏற்படுத்தியது.
இந்நிலையினை மாற்ற இறைப்புகழ் இயம்புத் தன்மை வாய்மை தலைமேற் கொண்டு வாழ்ந்தவர் வள்ளலார். அவர் தம் வழிப்பாட்டில் இறைவனுடைய திருவருள் நலத்தை பெறவேண்டுமென்பதே முதன்மை நோக்கமாகும். இறைவனை அடைவதற்கு பக்தியை சாதனம் என்பது முன்னைப் பழைமை கருணையே சாதனம் என்பது வள்ளலா? காட்டும் பின்னைப் புதுமையாகும்.
உலகின் கண், வேறு எந்த நாட்டையும் விடப் பாரத திருநாட்டில் தான் அறிவொளி பரப்பி, அகவொளி பெருக்கிய மெய்ஞானிகள் பலர் தோன்றியுள்ளனர். அருட்சோதியாய் ஆனந்தப் பெருக்காய், வான் தந்த அமுதாய் வளர்வேதநாதரின் அருள் திருச்செல்வராய் அவதரித்தவர் தான் இராமலிங்க வள்ளலார், நம் நாட்டில் வள்ளல்களாக வாழ்ந்தோர் பலராயினும், எண்ணற்ற அருட்பணிகளைச் செய்து வந்ததால் “வள்ளலார்" என்ற பெயர் அவருக்கே சொந்தமாயிற்று. வாழையடி வாழையென வந்த திருகூட்டத்தில் தனிப்பெரும் அருட்புலவராகச் சுடர்விடுவர் சிதம்பரம் இராமலிங்க அடிகள் ஆவார்.
19-ம் நூற்றாண்டில் உலகெங்கும் தோன்றிய மறுமலர்ச்சிச் சிந்தனையாளர்களில் தனித்துவம் பெற்றுத் திகழ்பவராக வள்ளலார். அயறிப்படுகிறார். சமூக சமய சீர்த்திருத்தக் கருத்துகளைப் போதிப்பவராக மட்டுமல்லாமல் அவற்றை நடைமுறைப்படுத்த இயக்கமும் நிறுவனங்களும் கண்டவர் மனித குலத்தையாண்டும் தாக்கும் பிரச்சனைகளான, பசி, பணி, மூப்பு, பயம், மரணம் போன்றவைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் கண்டவர் வள்ளலார். வடலூர் வள்ளலார் அடக்கத்தோடு வாழ்ந்த அருளாளர்களில் ஒருவர் நெஞ்சை உருக்கும் தமிழ்ப் பாடல்களால் மனித நேயத்தை வளர்த்தவர் கருவில் திருவுடைவரான இவர் இயற்றிய பக்திப் பனுவல்கள் திருவருட்பா என்று போற்றப்படுகின்றன.
திருவருட்பா
17/09/2021
296
IESMDT294
IMPORTANT DAYS
Paper Submission Last Date
September 27th, 2025
Notification of Acceptance
October 25th, 2025
Camera Ready Paper Submission & Author's Registration
November 11th, 2025
Date of Conference
November 28th, 2025